தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு சின்னசாமி என்ற முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதை கல்லுாரி மாணவர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனையடுத்து, முதியவர் சின்னாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியான அப்படங்கள், மிகவும் வைராலாகியதுடன், பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
Post A Comment:
0 comments: